Tuesday, May 14, 2024
Homeசெய்திகள்வயலுக்கு வந்த காட்டு யானைக்குட்டியை சுட்டுக் கொன்று புதைத்த ஐவர் கைது !

வயலுக்கு வந்த காட்டு யானைக்குட்டியை சுட்டுக் கொன்று புதைத்த ஐவர் கைது !

வயலுக்கு வந்த காட்டு யானைக்குட்டியை சுட்டுக் கொன்று புதைத்த ஐவர் கைது !

அநுராதபுரம் – கல்நெவ பிரதேசத்தில் உள்ள வயலுக்கு வந்த காட்டு யானைக்குட்டியை சுட்டுக் கொன்று இரகசியமாக புதைத்ததாக கூறப்படும் ஐவர் இன்று புதன்கிழமை (17) வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கல்நெவ பிரதேசத்தை சேர்ந்த 42 முதல் 50 வயதுக்குட்பட்டவர்களாவர்.5 அடி உயரமுடைய 5 வயது காட்டு யானைக்குட்டியே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

கல்நெவ பிரதேசத்தை சேர்ந்த 42 வயதுடைய பிரதான சந்தேக நபர் தனது வயலுக்கு வந்த காட்டு யானைக்குட்டியை தனது துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளார்.

சந்தேக நபர் உயிரிழந்த யானையின் சடலத்தை அயலவர்களின் உதவியுடன் தனது தோட்டத்திலேயே இரகசியமாக புதைத்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களத்தின் மீகலாவ வனவிலங்குகள் பாதுகாப்பு அதிகாரி ஐ.எம்.ஜி.செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments