Monday, April 29, 2024
Homeசெய்திகள்கொழும்பில் பல்கலை மாணவர்களின் போராட்டத்தில் பதற்றம்.

கொழும்பில் பல்கலை மாணவர்களின் போராட்டத்தில் பதற்றம்.

கொழும்பில் பல்கலை மாணவர்களின் போராட்டத்தில் பதற்றம்! ஊடகவியலாளர் உள்ளிட்ட பலர் மீது தாக்குதல்

ஆர்பாட்டக்காரர்கள் பொலிஸாரின் எதிர்ப்பிற்கு மத்தியில் மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முற்பட்ட போது பொலிஸாரால் தொடர் கண்ணீர்ப்புகை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

போராட்டக்களத்தில் பொலிஸாரை நோக்கி பல்கலை மாணவர்கள் கல்வீச்சுத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதன்போது, லங்காசிறீ மற்றும் ககன ஊடகவியலாளர்களும் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.

அரசாங்கத்திற்கு எதிராக அனைத்து பல்கலைக்கழக மாணவர்களால் தற்சமயம் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்தில் பொலிஸாரால் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

போராட்டக்காரர்களை கலைப்பதற்காக பொலிஸார் 45’ கீழே தாழ்த்தி கண்ணீர்ப்புகை தாக்குதலும் நடத்தியுள்ளனர்

இதனால் குறித்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து பல்கலைக்கழக மாணவர்களினால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

குறித்த போராட்டமானது இன்று(17.01.2024) ஶ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் சற்றுமுன் ஆரம்பமாகியுள்ளது.

இதன் போது ஆர்ப்பாட்டத்தை களைப்பதற்க்கு நூற்றுக்கணக்காண பொலிஸார் தயார் நிலையில் உள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

 

newslanka

 

RELATED ARTICLES

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments