இந்து மதத்தில் மகா சிவராத்திரி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும்.
இந்நாளானது சிவபெருமானுக்கு உரிய நாள்.
இந்நாளில் சிவனை நினைத்து விரதமிருந்து இரவு முழுவதும் கண் விழித்து சிவபெருமானை வணங்கினால், சிவனின் பரிபூர்ண அருளைப் பெறுவதோடு, அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைப்பதுடன், வாழ்வில் மகிழ்ச்சியும் செல்வமும் பெருகும்.
பொதுவாக மகா சிவராத்திரி நாளானது மாசி மாதத்தின் கிருஷ்ண பக்ஷ சதுர்ததசி திதியில் வரும்.
இந்த ஆண்டு மகா சிவராத்திரி எதிர்வரும் (08.03.2024) ஆம் திகதி வெள்ளிக்கிழமை வருகிறது.
ஜோதிடத்தின் படி, இந்நாளில் மிகவும் அரிதான மற்றும் சிறப்பு வாய்ந்த யோகம் உருவாகிறது.