நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அரச நிறுவனங்களும் தமது வருடாந்த நிதி அறிக்கைகளை பெப்ரவரி 28ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும் என கணக்காய்வாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் வருடாந்த நிதிநிலை அறிக்கையுடன் வெளியிடப்படவுள்ள கணக்காய்வாளர் நாயகத்தின் சுருக்க அறிக்கை அந்தந்த நிறுவனங்களுக்கு வழங்கப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது
இது தொடர்பான கணக்காய்வு நடவடிக்கைகளுக்கு 3 மாதங்கள் போதுமானது எனவும் கணக்காய்வாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
ஒடிட்டர் ஜெனரலின் சுருக்க அறிக்கை, ஆண்டு நிதிநிலை அறிக்கையுடன் மே 31க்கு முன் வெளியிடப்படும் எனவும் கணக்காய்வாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.