Wednesday, May 15, 2024
Homeஅரசியல்சமூக ஊடகங்களில் ஆபாச படங்களும் சைபர் குற்றங்களும் பல மடங்காக அதிகரிப்பு

சமூக ஊடகங்களில் ஆபாச படங்களும் சைபர் குற்றங்களும் பல மடங்காக அதிகரிப்பு

சமூக ஊடகங்களில் ஆபாச படங்களும் சைபர் குற்றங்களும் பல மடங்காக அதிகரிப்பு , இதற்காகத்தான் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் : டிரான் அலஸ்!

 

கடந்த வருடம் சமூகபடங்களில் ஒரு இலட்சத்திற்கும் மேலான நிர்வாணப்படங்கள் பரிமாறப்பட்டன என தெரிவித்துள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான்அலஸ் 8000சைபர்குற்றங்கள் இடம்பெற்றுள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் குறித்த விவாதத்தை இன்று நாடாளுமன்றத்தில் ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையில் அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

2024 இன் முதல்வாரங்களி;ல் சமூக ஊடகங்களில் 500க்கும்மேற்பட்ட ஆபாசபடங்களை தங்களிடையே பரிமாறிக்கொண்டுள்ளனர் கடந்த வருடம் 6690 இணையவழி குற்றச்செயல்கள் இடம்பெற்றுள்ளன எனவும் டிரான்அலஸ் தெரிவித்துள்ளார்.

இந்த புள்ளிவிபரங்கள் சிஐடியினரால் பதியப்பட்டவை மாத்திரமே வெளிவராத சம்பவங்கள் பல இருக்கலாம் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் குற்றங்களை கட்டுப்படுத்தும் நோக்கத்தையும் கிளர்ச்சிகள் இனமத ஐக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் குழப்பங்களை கட்டுப்படுத்துவதையும் நோக்கமாக கொண்டவை எனவும் தெரிவித்துள்ள அமைச்சர் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலத்தை பயன்படுத்தி எவரையும் பழிவாங்கும் நோக்கமில்லைஎனவும் தெரிவித்துள்ளார்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments