Friday, May 17, 2024
Homeசெய்திகள்யாழப்பாணத்தில் பரிதாபமாக உயிரிழந்த 27 வயது இளைஞன்!

யாழப்பாணத்தில் பரிதாபமாக உயிரிழந்த 27 வயது இளைஞன்!

யாழ். சாவகச்சேரி பகுதியில் போதைப்பொருளுக்கு அடிமையான 27 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

போதைப்பொருள் பாவித்து காணப்பட்டிருந்த இளைஞனை உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து, உடற்கூற்று பரிசோதனை மேற்கொண்ட போது, இளைஞன் ஹெரோயினுக்கு அடிமையானவர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் நேற்றைய தினம் குறித்த இளைஞனுடன் போதைப்பொருளை நுகர்ந்த ஏனைய இளைஞர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

இதேவேளை குறித்த இளைஞன் நீண்ட காலமாக போதைப்பொருளுக்கு அடிமையான நிலையில், கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் தங்கி சிகிச்சை பெற்று வீடு திரும்பிய பின்னர், மீண்டும் போதைக்கு அடிமையாகி உள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments