இலங்கையில் காற்று மாசுபடுதல் மோசடைந்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
காற்றின் தரம் மோசமடைந்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்இலங்கையின் பல பகுதிகளில் காற்று மாசுபடுதல் இன்று மோசமடைந்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று காலை 09.30 மணி நிலவரப்படி கொழும்பு, காலி, குருநாகல் மற்றும் கம்பஹா ஆகிய பகுதிகளில் காற்று மாசுபடுதல் ஆரோக்கியமற்றதாக பதிவாகியுள்ளது.
அனுராதபுரம், கண்டி, நீர்கொழும்பு, மிரிஹான மற்றும் பண்டாரவளை பகுதிகளில் உள்ள உணர்திறன் கொண்ட குழுக்களுக்கு காற்றின் தரம் ஆரோக்கியமற்றதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பில் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு மத்திய சுற்றாடல் அதிகாரசபை கோரியுள்ளது.
மக்கள் மாஸ்க (mask)அணிந்து செல்லுதல் நன்றாக இருக்கும் என்று கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்